பக்கங்கள்

செவ்வாய், 7 நவம்பர், 2023

திருவிழாக்களில் பாகுபாடா? தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறை ஆணை

Viduthalai  August 03, 2022  தமிழ்நாடு,

 சென்னை, ஆக. 3- மாவட்ட அரசு நிர்வாகம் சார்பில் நடைபெ றும் திருவிழாக்களில் எவ்விதப் பாகுபாடும் காட்டக் கூடாது என தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதன் முறையாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புவிசார் குறியீடு பெறும் நோக்கில் மே 13,14,15 ஆகிய மூன்று நாட் களில், "ஆம்பூர் பிரியாணி திரு விழா 2022” (20க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட அரங்குகள்) நடைபெறும் என்று திருப் பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற ஆலோசனைக் கூட் டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர், துணை ஆட்சியர், வட்டாட்சி யர், நகர மன்றத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலை வர்கள், பேரூராட்சித்தலைவர் கள் உட்படப் பலர் பங்கேற் றனர்.

அப்பொழுது பேசிய மாவட்ட ஆட்சியர் அமர் குஷ் வாஹா, ஆம்பூரில் நடை பெறும் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி தவிர அனைத்து வகையான பிரியாணி வகை களும் கிடைக்கும் என்று தெரிவித்தார். மேலும் இது தொடர் பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பிலும் ஏன் மாட் டிறைச்சி தவிர்க்கப்படுகிறது என்பதற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை.

மேற்கண்ட செய்திக் குறிப் பையும் விளம்பரத்தையும் கண்ட ஆம்பூரில் உள்ள தாழ்த் தப்பட்ட அமைப்புகள், இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதி ராகக் கடைப்பிடிக்கப்படும் உணவுத் தீண்டாமை என்று எதிர்ப்புக் குரல் எழுப்பியதோடு மட்டுமின்றி, ஒருவேளை அப் படி நடந்தால் தாங்கள் மாவட்ட நிர்வாகம் நடத்தும் பிரியாணி திருவிழாவுக்கு எதிரிலேயே ‘பீப் பிரியாணி' கடைகளை நடத்துவோம் என் றும் அறிவித்தனர்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன் னணியின் மாநிலத் துணைச் செயலாளர் ஆம்பூரைச்சேர்ந்த சி.ஓம் பிரகாசம், தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் மாநில ஆணை யத்திற்கு 12.05.2022 அன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதில் பின்வருமாறு குறிப் பிட்டிருந்தார்:

ஆம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற் பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். எங்களின் முக்கிய உணவாகிய மாட்டி றைச்சியை அரசு நடத்தும் விழாவில் அனுமதிக்க மாட் டோம் என்று எங்கள் மீது உணவுத் தீண்டாமையை அதி காரிகள் நிகழ்த்துகின்றனர். ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி சாப்பிடாத மாட்டி றைச்சி மட்டுமே சாப்பிடக் கூடிய எங்களைப் போன்ற வர்கள் அவ்விழாவில் பங்கேற்க முடியாத சூழலை தீண்டா மையை ஒழிக்க வேண்டிய அரசு அதிகாரிகளே உருவாக் குகிறார்கள். இது எங்கள் மீது நிகழ்த்தப்பட்ட உளவியல் ரீதி யான வன்முறையாகவே நாங் கள் உணர்கிறோம். ஆணையம் என்னுடைய புகாரை ஏற்று மாட்டிறைச்சி பிரியாணியை விழாவில் அனுமதித்து நீதி வழங்க வேண்டுமாய் கேட் டுக்கொள்கிறேன்.

-இவ்வாறு அதில் குறிப்பிட் டிருந்தது.

இப்புகாரைப் பரிசீலித்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் ஆணை யம், "அரசின் மாவட்ட நிர்வா கம் நடத்து கின்ற 20 வகை யான பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை மட்டும் புறக்கணித்து இருப் பது, அங்கு வசிக்கும் ஏறக் குறைய இரண்டு லட்சம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான அதி காரப்பூர்வமான பாகுபாடா கும். இதற்கு ஏன் தங்கள் மீது நட வடிக்கை எடுக்கக் கூடாது” என்று விளக்கம் கேட்டு, ஓர் அறிவிக்கையை 12.05.2022 அன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியது.

மேற்கண்ட அறிவிக்கை மின்னஞ்சல் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட வுடன் மழையைக் காரணம் காட்டி பிரியாணி திருவிழாவை ஒத்திவைப்பதாக ஆட்சியர் அறிவித்தார்.

அதுமட்டுமல்ல, அடுத்த நாள் வெளிவந்த ஆங்கில "தி இந்து ” (13.05.2022) நாளேடுக்கு அளித்த பேட்டியில், "பிரியாணி திருவிழாவை ஒத்தி வைத்து விட்டதால் தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் உத்தரவு செல்லத்தக்கது அல்ல” என்றும் தெரிவித்திருந்தார்.

மாவட்ட ஆட்சியரின் இத் தகைய பேட்டி ஆணையத்தை அவமதிப்பதாக அமைந்துள் ளது; இதற்கென அவர்மீது தனி நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றாலும் ஒரு மாவட்டத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பை அவர் வகிப்பதால் மக்கள் மத்தியில் அவருடைய மதிப்பு குறைந்து விடக்கூடாது என்ற அடிப் படையில் ஆணையம் அத்த கைய நடவடிக்கை எதையும் மேற்கொள்வதைத் தவிர்த்து விட்டது.

மேலும், ஆணையத்தின் அறிவிக்கைக்கு 07.06.2022 அன்று பதில் அறிக்கை அனுப் பிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், ஆணையம் தனது அறிவிக்கையில் குறிப்பிட்டி ராத பன்றி இறைச்சியைப் பற்றி கருத்து தெரிவித்திருக் கிறார். பிரியாணி செய்வதற்காக பன்றி இறைச்சி எங்குமே பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும். ஆம்பூரில் உள்ள முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இத்தகைய தொரு வாதத்தை ஆட்சியர் முன் வைத்திருந்தார்.

எனினும் அவர் எதிர்பார்த்த எந்த விளைவையும் அது ஏற்படுத்தவில்லை. எது எப்படி இருப்பினும் சர்ச்சைக்குரிய பிரியாணி திருவிழாவில் மாவட்ட நிர்வாகம் ஜாதி ரீதியாக மக்களிடம் பாகுபாடு காட்டவில்லை என்ற ஆட் சியரின் பதிலை ஆணையம் ஏற்கிறது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட் சியரின் பதிலை ஆணையம் ஏற்றுக் கொண்டாலும், அரசு ஏற்பாடு செய்யக்கூடிய பிரி யாணி திருவிழாவில் மாட்டி றைச்சி பிரியாணி தவிர்க்கப் படக் கூடாது என்பதையும், அப்படித் தவிர்த்தால் அது பாகுபாட்டுக்கு வழி வகுக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி, இனிவரும் காலங்களில் நடை பெறும் திருவிழாக்களில் மாவட்ட நிர்வாகம் பாகுபாட் டுக்கு வழிவகுக்கக் கூடாது என்ற உத்தரவை தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் மாநில ஆணையம் பிறப்பிக்கிறது.

ஆணையத்தின் இவ்வுத் தரவு, தலைமைச் செயலர், உள் துறைச் செயலர் மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

இவ்வாறு ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாநில ஆணை யம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக