பக்கங்கள்

வியாழன், 9 நவம்பர், 2023

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கூடுதலாக ஜாதிகளை சேர்க்க மாநிலங்களுக்கு அதிகாரம் மசோதா மக்களவையில் எதிர்ப்பின்றி நிறைவேறியது


v5

புதுடில்லிஆக.11 இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எந்தெந்த சாதிகளை சேர்ப்பது என முடிவெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்ட திருத்த மசோதா மக்கள வையில் நிறைவேறியதுஇடஒதுக் கீட்டு உச்சவரம்பை நீக்க தி.மு.காங்கிரஸ்உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

27 சதவீத இடஒதுக்கீட்டுக்கான இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டி யலில் (.பி.சி.) எந்தெந்த சாதிகளை சேர்ப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு மீண்டும் அளிப்பதற்கான 127ஆவது அரசமைப்பு சட்ட திருத்த மசோ தாவை ஒன்றிய அரசு உருவாக்கி உள்ளதுஇம்மசோதாவை நேற்று முன்தினம் நாடாளுமன்ற மக்கள வையில் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் தாக்கல் செய்தார்.

இந்தநிலையில்மக்களவையில் நேற்று (10.8.2021) இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப் பட்டதுஅப்போதுபெகாசஸ் உளவு விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்அமைதியாக இருக்கைக்கு திரும்பிவிவாதத்தில் பங்கேற்றனர்.

மழைக்கால கூட்டத்தொடரில்இந்த மசோதா மீது மட்டுமே அமைதியாக விவாதம் நடந்ததுஒன்றிய அமைச்சர் வீரேந்திர குமார்இதர பிற்படுத்தப்பட்டோர் மசோதாவரலாற்று சிறப்புமிக்கதுஇந்த மசோதாவால் 671 ஜாதிகள் பலனடையும் என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிவிவாதத்தை தொடங் கினார்அவர் பேசியதாவது:-

இதர பிற்படுத்தப்பட்டோர் மசோதாவை காங்கிரஸ் முழுமன தாக ஆதரிக்கிறது.

பஞ்சாப்உத்தர பிரதேசம்உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக இதை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளதுஅதே சட்டபூர்வ உரிமையை மற்ற மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும்மாநிலங்களுடன் பேசி, 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு அளவை உயர்த்த வேண்டும்.

நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க ஒன்றிய அரசு மசோதா கொண்டு வந்ததுபோல்இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை நீக்க மசோதா கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.சார்பில் பேசிய டி.ஆர்.பாலுவும் இடஒதுக்கீட்டு உச்ச வரம்பை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும்அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), லாலன்சிங் (ஐக்கிய ஜனதாதளம்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), ரிதேஷ் பாண்டே (பகுஜன் சமாஜ்ஆகிய உறுப்பினர்களும் 50 சதவீத உச்ச வரம்பை நீக்க வேண்டும் என்றும்சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண் டனர்.

அப்னா தளம் நாடாளுமன்ற உறுப்பினரும்ஒன்றிய அமைச்ச ருமான அனுப்ரியா படேல்அகில இந்திய  மஜ்லிஸ் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர் அசாதுதின் ஒவைசி ஆகியோரும் இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அனுப்ரியாஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்தாழ்த்தப்பட் டோர் முஸ்லிம் களுக்கு இட ஒதுக்கீடு அளிக்குமாறு ஒவைசி கோரிக்கை விடுத்தார்சிவசேனாஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் களும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

விவாதம் முடிந்தநிலையில்நேற்று (10.8.2021) இரவு மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது.

386 உறுப்பினர்கள் மசோதா வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்இதனால் மசோதா நிறைவேறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக