பக்கங்கள்

வெள்ளி, 27 அக்டோபர், 2017

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் தாழ்த்தப்பட்ட கர்ப்பிணிப் பெண் அடித்துக்கொலை!

என்று தீரும் இந்தக் கொடூரம்!

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் தாழ்த்தப்பட்ட கர்ப்பிணிப் பெண் அடித்துக்கொலை!

குப்பைத் தொட்டியைத் தொட்டதால்  தீட்டாகிவிட்டதாம்



மீரட்,அக்.25 உத்தரப்பிரதேச மாநிலம் பலாந்துசாகர் மாவட்டம், கேட்டலாப்பூர் பன்சோலி கிராமத்தைச் சேர்ந்தவர் தாழ்த் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண்ணான சாவித்ரி தேவி (வயது 34). இவர் கடந்த 15.10.2017 அன்று அக்கிராமத்திலுள்ள குப்பைத் தொட்டியைதொட்டுவிட்டதால்தீட் டாகி விட்டதாகக் கூறி, அதே கிராமத் தைச் சேர்ந்த ரோகித் குமார், அவர் தாயார் அஞ்சுதேவி ஆகியோர் சேர்ந்து சாவித்ரிதேவியை சரமாரியாகத் தாக்கி னார்கள். சாவித்ரி தேவி ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில்,அவர் வயிற்றில் சரமாரியாக தாக்கினர். சாவித்ரி தேவியின் ஒன்பது வயது மகள் கண்முன்பாகவே இக்கொடுமை நடைபெற்றது.

மருத்துவமனையிலும் சிகிச்சை மறுப்பு!

சாவித்ரி தேவி கடுமையாகத் தாக்கப் பட்டதால் அதிகமான ரத்தப்போக்குக்கு உள்ளானார். சாவித்ரி தேவியைக் காப் பாற்றிட அவர் கணவர் திலீப் குமார் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அவரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சைக்குஅனுமதிக்காமல்மருத்துவ மனையிலிருந்து வெளியே அனுப்பி விட்டார்கள்.இந்நிலையில்கடந்த சனிக்கிழமையன்று வலி பொறுக்க முடியாத சாவித்ரி தேவியை மீண்டும் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் கள் கூறினார்கள்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் சொல்லுகிறார்!

இதுகுறித்து சாவித்திரிதேவியின் கணவர் திலீப் குமார் கூறியதாவது:

‘‘என்னுடைய மனைவி தவறுத லாகவே குப்பைத் தொட்டியைத் தொட்டுவிட்டார். ஆனால், ரோகித் மற்றும் அவருடைய தாயார் அஞ்சுதேவி என் மனைவியை கொடூரமாகத் தாக்கி னார்கள். அவர்கள் தாக்கூர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். கோத்வாலி தேகாட் காவல்நிலையத்தில் 15.10.2017 அன்றே புகார் கொடுக்கச் சென்றோம். ஆனால், எங்கள் புகாரை வாங்காத அதிகாரிகள் எங்களைத் துரத்தினர். கடந்த வெள்ளிக் கிழமை அன்றுதான் நாங்கள் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்ப் பட்டது’’ என்றார்.

காவல்துறைத் தரப்பில் கூறப்படுவ தாவது:

ரோகித் குமார் மற்றும் அவருடைய தாயார் அஞ்சுதேவி ஆகியோர்மீது இந்திய தண்டனைச்சட்டப்பிரிவுகள் 323 (காயமேற்படும்படி தாக்கியது), 504 (இழிவுபடுத்தும் நோக்கில் அமைதியை சீர்குலைப்பது) ஆகிய பிரிவுகளின் கீழும், சனிக்கிழமை சாவித்ரி தேவி உயிரிழந்த நிலையில், திங்கள்கிழமை அன்று இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 304 (கவனக்குறைவால் இறப்பு), 316 (பிறக்கும் முன்பாகவே குழுந்தையைக் கொடூரமாகக் கொலை செய்வது) ஆகிய பிரிவுகளின்கீழும்,தாழ்த்தப்பட்ட,பழங் குடியினத்தவர்கள்மீதானவன்கொடு மைத் தடுப்புச்சட்டம் ஆகியவற்றின் கீழும் சாவித்ரி தேவியைத் தாக்கிய இருவர்மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டது.

மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் பிரவீன் ரஞ்சன் கூறியதாவது:

‘‘தாழ்த்தப்பட்ட பெண்ணைத் தாக் கிய புகாரில் ஒரு பெண் மற்றும் அவர் மகன்மீது வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது. காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள காவல்துறை அலுவலர் இவ்வழக்கில் விரைவில் விசாரணை செய்வார்’’ என்றார்.

கோத்வாலி காவல்நிலைய அலுவலர் தேபேஷ்வர் சிங் கூறுகையில்,

“உடற்கூறு ஆய்வில் தலையில் ஏற்பட்ட உள்காயத்தால்தான் அவர் இறந்திருப்பதாக அறிக்கை உள்ளது’’ என்றார்.
-விடுதலை நாளேடு, 25.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக