பக்கங்கள்

செவ்வாய், 10 அக்டோபர், 2017

கருநாடக மாநிலத்தில் 70 விழுக்காடு இடஒதுக்கீடு




பெங்களூரு, அக். 6 கல்வி மற்றும்  வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டில்  தனியே சட்டத்திருத்தம் செய்யப்பட்டு இட ஒதுக்கீடு 69 விழுக்காடாக பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை முன்மாதிரியாகக் கொண்டு, கருநாடக மாநிலத்தில் 70 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளதாக கருநாடக முதல்வர் சித்தராமையா குறிப்பிட் டுள்ளார்.

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக் கீடு வழங்குவதற்காக அரசமைப்புச் சட் டத்தில் 76 ஆவது திருத்தம் செய்யப்பட்டு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு பின்பற்றப் பட்டு வருகிறது.

தமிழ்நாடு வழிகாட்டியுள்ளபடி, கரு நாடக மாநிலத்தில் 70 விழுக்காடு இட ஒதுக் கீடு வழங்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

விதான் சவுதாவில் வால்மீகி பிறந்த நாள் விழாவில் கருநாடக முதல்வர் சித் தராமையா கலந்துகொண்டு உரையாற்றிய போது  இத்தக வலைத் தெரிவித்தார். அவர் பேசும்போது குறிப்பிட்டதாவது:

இடஒதுக்கீடு அளிப்பதில் உச்சநீதி மன்றம் 50 விழுக்காட்டுக்குமேல் கூடாது என்று உச்ச வரம்பாகக் குறிப்பிட்டிருந்த நிலையில், இடஒதுக்கீடு பெறுகின்ற வகுப் பினருக்கு 69 விழுக்காட்டை தமிழ்நாடு அரசு அளிக்க முடிவு செய்து வழங்கி வருகிறது.

வாழ்வாதாரத்துக்காக போராடி வரு கின்ற உழைக்கும் மக்கள் முன்னேற்றம் அடைந்திட, எல்லா நிலைகளிலும் போது மான பிரதிநிதித்துவம் இல்லாமல் உள்ளனர்.

கருநாடக அரசு தாழ்த்தப்பட்ட, பழங் குடி வகுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு கல்வி யிலும், பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பிலும் உரிய வாய்ப் புகளைப் பெற்றிட கருநாடக மாநிலத்தில் 70 விழுக்காடு இட ஒதுக்கீடாக  அளிப்பதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டுவரும்.

நான் இதை செய்வது வாக்குகளுக்காக அல்ல. வாய்ப்பற்ற மக்களுக்கு சமூக நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதை செய்கிறேன்.

இந்த நிதி ஆண்டில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு நலத்திட்டங் களை செயல்படுத்துவதற்காக ரூ.7ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களின் பேரணியை பல்லாரியில் டிசம்பர் முதல் வாரத்தில் அரசே முன்னின்று நடத்திட உள்ளது.

இவ்வாறு கருநாடக முதல்வர் சித்த ராமையா கூறினார்.

  விடுதலை நாளேடு,6.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக