பக்கங்கள்

சனி, 5 டிசம்பர், 2015

ஆச்சாரியார் பார்வையில்...


சீத்தாராமைய்யர் ஆத்திரமாய் பேசினார். சாஸ் திரத்தில் நாலு வர்ணங்கள் தானே சொல்லியிருக் கிறது? அய்ந்தாவது வர்ணம் கிடையாதே. இந்த ஜனங்களை நாலாவது வர்ணமாக பாவித்து நடத்தினால் என்ன மோசம் முழுகிவிடும்? என்று சின்ன வக்கீல் கேட்டார். ஜகதீச சாஸ்திரிகள்: இங்கிலீஸ் மொழி பெயர்ப்புகளை படித்து விட்டு சாஸ்திரங்களை கரை கண்டதுபோல் பேசுகிறீர்கள்.
ஆதி சிருஸ்டி நாலு வர்ணம்தான். அதற்கு பிறகு வர்ணக் கலப்பு ஏற்பட்டு சங்கர சாதி உற்பத்தியாயிற்று. பிரதி ரோமச் சேர்க்கைகளின் பலனாகச் சாதி சண்டாளர்கள் உண்டானார்கள். சின்ன வக்கீல்: பிரம்மாவுடைய எண்ணம் சாயாமல் போச்சுப் போலிருக்கிறது.
பறையன், பள்ளன், சக்கிலியன் எல்லோரும் கெட்டுப் போன பிராமண ஸ்தீரிகளின் சந்ததிகள் என்றா சொல்லுகிறீர்கள்? சாஸ்திரிகள்: அப்படி எல்லாம் நோண்டி பார்த்தால் சரிப்படாது. தலைமுறை தலைமுறையாக அவர்களை சண்டாளர்கள் என்று வைத்து நடத்தி வந்திருக்கிறோம்.
இதற்கெல்லாம் ருசு கேட்கக் கூடாது. நாம் பிராமணர்கள் என்பதற்கு என்ன ருசு? என்றார்.
(வானதி பதிப்பகம் வெளியிட்ட சி.ராஜகோபாலாச்சாரியார் எழுதிய ராஜாஜி கதைகள் என்ற நூலிலிருந்து)
தகவல்: வி.வாசுதேவன், திருவொற்றியூர்.
-விடுதலை,12.10.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக