பக்கங்கள்

புதன், 9 டிசம்பர், 2015

சிவக்கொழுந்து, துண்டை எடுக்காதே! தோளில் போட்டுக்கொள்!

அந்தக் காலத்தில் நாதசுர இசை என்பது தமிழனுக் குரிய இசைகளில் சிறப்பான இசையாகும். நாதஸ்வரமும், தவிலும் சாதாரணமானதல்ல. அப்படி வாசித்துக் கொண்டி ருந்த காலத்தில் ஒரு சம்பவம், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய காலகட்டத்தில்,
பெரியார் அவர்கள் எந்த எதிர்ப்புக்கும் துணிந்தவர், சாதித்தவர் என்பதற்கும் அடையாளம் என்ன என்று சொன்னால்,
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில், காரைக்குடி, செட்டிநாடு போன்ற பகுதி களில் அவர்கள் திருமணம் நடத்தும்பொழுது, பிரபல நாதசுர வித்வான்களை அழைத்து கச்சேரி நடத்தி, பெண் ஊர்வலம், மாப்பிள்ளை ஊர்வலங்களை நடத்துவார்கள்.
பெரியாரும், அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி ஆகியோர் எல்லாம் சுற்றுப்பயணம் செய்து கொண்டு வருகிறார்கள்.  பட்டுக்கோட்டை அழகிரி அவர் களுக்கு இசையில் அளவுக்கதிகமான ஈடுபாடாகும்.
மதுரை சிவக்கொழுந்து என்ற பிரபலமான நாதசுர வித்வான். அவர் நாதசுரம் வாசிக்கிறார் என்று தெரிந்த வுடன்,
அழகிரிசாமி அவர்கள் தந்தை பெரியாரிடம், அய்யா நீங்கள் போய் அறையில் தங்குங்கள். நான் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் என்று காரை விட்டு இறங்கினார். மறுநாள்தான் பெரியாருக்கு அங்கே நிகழ்ச்சி.
அங்கே நடைபெற்ற பெண் ஊர்வலத்தில், மதுரை சிவக்கொழுந்து குழுவினரின் இசை நிகழ்ச்சி தொடங்கி, கொஞ்சம் தூரம் வந்தவுடன், அப்பொழுதெல்லாம் நாதசுர வித்வான்கள் மேல் சட்டை அணியாமல், தோளில் ஒரு துண்டை மட்டும்தான் அணிந்து வருவார்கள். அதே போன்று அந்த ஊர்வலத்திலும் துண்டு போட்டு வாசித்து வருகிறார்கள். சிவக்கொழுந்து, துண்டை எடுக்காதே! தோளில் போட்டுக்கொள்! அங்கே இருந்த நகரத்தார் சொன்னார், நீங்கள் தோளில் துண்டு போட்டு நாதஸ்வரம் வாசிக்கக்கூடாது; எங்கள் முன் நீங்கள் தோளில் துண்டு போட்டு வாசிப்பதை இங்கே எதிர்க்கிறார்கள். ஆகவே, நீங்கள் துண்டை எடுத்துவிட்டு வாசிக்கவேண்டும் என்று சொன்னார்.
உடனே சிவக்கொழுந்து அவர்கள், அய்யா நான் தோளில் துண்டு போடவில்லை. முகத்தில் வழியும் வியர் வையைத் துடைப்பதற்காக அந்தத் துண்டைப் போட்டி ருக்கிறேன் என்று சொன்னார்.
உடனே அங்கே இருந்தவர்கள், முடியாது, முடியாது என்று சொல்கிறார்கள்.
சிவக்கொழுந்து அவர்களுக்கோ என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த இசைக் கச்சேரியைவேடிக்கைப் பார்த்துக்கொண் டிருந்தவர்களிடமிருந்து ஒரு குரல், சிவக்கொழுந்து, துண்டை எடுக்காதே! தோளில் போட்டுக்கொள்! என்று.
எல்லோரும் திரும்பி பார்க்கிறார்கள்! அங்கே பட் டுக்கோட்டை அழகிரி நின்று கொண்டிருக்கிறார்.
யார் அது? என்ன புது ஆள், இவர் வந்து கலாட்டா செய்கிறார் என்று கேட்கிறார்கள்.
அவர் ஒன்றும் புதிய ஆள் இல்லை; பெரியாரோடு வந்திருக்கிறார் என்று சொன்னவுடன், அப்பொழுது இன்னும் மோசமாக செய்வார் என்று சொன்னார்கள்.
முகத்தில் வழியும் வியர்வையைத் துடைப்பதற்காகத் தானே துண்டு போட்டிருக்கிறார். ஏன் நீங்கள் அனு மதிக்கக் கூடாது? சிவக்கொழுந்து நீங்கள் துண்டு போட்டுக் கொண்டு தான் வாசிக்கவேண்டும் என்று அழகிரிசாமி சொல்கிறார்.
தந்தை பெரியார் கோபமடைந்தார்!
பெண்ணும் - மாப்பிள்ளையும் ஊர்வல வண்டியி லேயே  இருக்கிறார்கள். வண்டியும் நகரவில்லை. கிட்டத் தட்ட அரை மணிநேரமாக அந்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரச்சினை பெரிதாகி, தந்தை பெரியாரிடம் சென்றார்கள்.
அய்யா நீங்கள் சொல்லுங்கள், உங்கள் ஆள் தகராறு செய்கிறார் என்று சொன்னார்கள்.
என்ன செய்தி என்று தந்தை பெரியார் கேட்டார்.
ஜாதி அடிப்படையில் நாதஸ்வரம் வாசிப்பவர் கீழ்ஜாதி. அவர் தோளில் துண்டை போட்டுக்கொண்டு வாசிக்கக்கூடாது; அது ஜாதியினுடைய பெருமைகளைக் கெடுத்துவிடுகிறது என்பது போன்று சொன்னவுடன்,
தந்தை பெரியாருக்குக் கோபம் வந்து, அப்படியா, நானும் அங்கே வருகிறேன் என்று சொல்லி, அங்கே சென்றார். கலவரத்தைத் தீர்த்து வைக்கும்படி தந்தை பெரி யாரிடம் சென்றார்கள்; பெரியாரும் அந்தக் கலவரத்தில் பங்குகொண்டார். அங்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது.
தந்தை பெரியார் அவர்கள், அழகிரி சொல்லியது நியாயம்தான் என்றார்.
வேறு வழியில்லாமல், சிவக்கொழுந்து அவர்களை தோளில் துண்டு போடாதீர்கள் என்று சொல்லக்கூடிய வர்கள் குறைந்து, துண்டை போட்டுக்கொண்டு வாசியுங் கள் என்று சொல்லியவர்கள் அதிகமானார்கள்.
பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் ஒரு துண்டை எடுத்துக்கொண்டு சென்று, சிவக்கொழுந்து அவர்களின் கழுத்தில் போட்டுவிட்டு, ஒரு விசிறியை வாங்கி, சிவக் கொழுந்து வாசிக்க, வாசிக்க, பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் விசிறிக் கொண்டே நடந்து சென்றார். இதுதான் சுயமரியாதை இயக்கம்!
-சிங்கப்பூரில் ஆசிரியர் கி.வீரமணி உரை
-விடுதலை,22.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக