பக்கங்கள்

செவ்வாய், 3 ஜூலை, 2018

கோவிலுக்குள் நுழைய விடாமல் குடியரசுத் தலைவரும் அவரது மனைவியும் பார்ப்பன அர்ச்சகர்களால் தள்ளிவிடப்பட்டனர்!


கோவிலுக்குள் நுழைய விடாமல் குடியரசுத் தலைவரும் அவரது மனைவியும் பார்ப்பன அர்ச்சகர்களால் தள்ளிவிடப்பட்டனர்!




பூரி கோவிலில் உள்ளே நுழையும் படிக்கட்டுக்குமேல் நின்று வழிபடும் குடியரசுத் தலைவரும், அவரது மனைவியும்


கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ஜகன்னாதர் கோவிலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும், அவரது மனைவி சவீதாவும் சென்றனர். இந்திய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக பூரி கோவிலுக்குச் சென்றார். கோவில் கருவறை அருகே ராம்நாத் கோவிந்தும், சவீதாவும் சென்றபோது அங்கிருந்த பார்ப்பனர்கள்  அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

மேலும் குடியரசுத் தலைவர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கோவிலுக்குள் நுழைய விடாமல் தள்ளி விடப்பட்டனர்.  கோவில் பாதுகாவலர்களின் முரட்டுத்தனமான நடவடிக்கை குறித்து பூரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அகர்வாலுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை புகார் கடிதம் எழுதியுள்ளது. (தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்', 28.6.2018)

-  விடுதலை நாளேடு, 29.6.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக