பக்கங்கள்

செவ்வாய், 24 ஜூலை, 2018

இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் மீண்டும் போராட்டம்

மும்பை, ஜூலை 22 இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் மீண்டும் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். சோலாப்பூரில் அரசு பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப் பட்டது.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர். அரசுடன் நடந்த பேச்சு வார்த் தையை அடுத்து அவர்கள் போராட்டத்தை நிறுத்தி வைத் திருந்தனர்.

இந்தநிலையில் மராத்தா சமூகத்தினர் நேற்று மீண்டும் இடஒதுக்கீடு கேட்டு மாநிலத் தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோலாப்பூரில் சம்பாஜி சவுக் பகுதியில் நடந்த போ ராட்டத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல சோலாப்பூர் வடக்கு பகுதியில் போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்றை வழிமறித்து நிறுத்தி தீ வைத்து எரித்தனர்.

மராத்தா சமூகத்தினரின் இந்தப் போராட்டம் லாத்தூர், பீட் போன்ற இடங்களிலும் நடந்தது. அங்கு நடந்த போராட்டத்தில் பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக் கப்பட்டன.

ஒரு சில இடங்களில் போராட்டக்காரர்கள் முதல்- அமைச்சர் தேவேந்திர பட்னா விசின் உருவப்படத்தை தீ வைத்து எரித்தனர்.

பீட் மாவட்டத்தில் மராத்தா சமூகத்தினர் தங்கள் தலையை மொட்டையடித்து போராட்டத் தில் ஈடுபட்டனர்.

- விடுதலை நாளேடு, 22.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக