பக்கங்கள்

திங்கள், 10 அக்டோபர், 2016

மத்திய அரசின் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று விழுக்காடு ஒதுக்கீடு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூலை 7 இந்திய அரசுத் துறைகளின்கீழ் உள்ள அனைத்துப் பணியிடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று விழுக்காடு இட ஒதுக்கீட்டை அளித்திட வேண்டும் என்று 2.7.2016 அன்று உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பின்மூலமாக மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற  நீதிபதிகள் ஜெ.சலமேசுவர் மற்றும் அப¢ எம்.சாப்ரி ஆகியோரைக் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில்,

மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை 30.6.2016 அன்று அனுப்பியுள்ள கடிதத் தில் குரூப் ஒன்று மற்றும் இரண்டாம் பிரிவுகளில் மாற் றுத் திறனாளிகளுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்குவது முடியாது என்று குறிப்பிடுவது  (அனைவருக்கும் சம வாய்ப்பு, முழுமையான பங்கேற்புக்கான உரிமை பாதுகாப்பு சட்டம் 1995இன் கீழ்) சட்டவிரோதமானதும், பொருத்தமில்லாததுமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதில் இதேபோல் ஏற் கெனவே 1997 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளிலும் பணியா ளர் மற்றும் பயிற்சித்துறை  இது போன்ற சுற்றறிக்கை மூலமாக மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நீதிபதிகள்கொண்ட அமர் வின் தீர்ப்பில் குறிப்பிடும் போது, குரூப் ஏ மற்றும் குரூப் பி ஆகிய பிரிவுகளில் அனைத்து பதவி நிலைகளிலும், பொதுப் பணித்துறையிலும் மூன்று விழுக்காடு இடஒதுக்கீட்டை  அளித்து பணிநியமனங்களை செய்திட வேண்டும் என்று உத்தரவிடுவதாகத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த எண்ணிக்கையில் உள்ளதாக இதயமில்லாமல் குறிப் பிட்டு  மாற்றுத்திறனாளிகளுக்கு (மூன்று விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ள) 1995ஆம் ஆண்டு சட்டத்தின்படி நீண்ட காலத்துக்குப்பிறகு அரசுப்பணி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளாக உள்ள வர்கள் அரசுப்பணிகளில் நுழைவதற்கான தடைகள் நீக்கப்பட வேண்டும். 1995ஆம் சட்டத்தின்படி தீர்க்கமாக ஆய்ந்து  சட்டத்துக்குட்பட்டு அவரவர் நிலைக்கு ஏற்ப பணி கள் வழங்கப்படவேண்டும் என்று அமர்வின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-விடுதலை,7.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக