பக்கங்கள்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

ராமராஜ்யத்தில்...


உத்தரப்பிரதேசம் மதுராவில் உள்ள ஒரு பகுதியில் அஷாத் அம்மாவாசை(ஆடி அம்மாவாசை) கொண்டாடிய உயர்ஜாதியினர் பூஜையில் பயன்படுத்தப்பட்ட பழங்களை பசுமாட்டிற்கு கொடுக்க வைத்திருந்தனர். அருகில் உள்ள தாழ்த்தப்பட்ட குடியிருப்பைச் சேர்ந்த சிறுவர்கள் மாட்டிற்கு வைத்திருந்த பழங்களை சாப்பிட்டுவிட்டனர். இதை அறிந்த உயர்ஜாதியினர் அந்தச்சிறுவர்களை விரட்டிப் பிடித்தனர். இதில் இரண்டு சிறுவர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை பழங்களைத் திருடித்தின்ற குற்றத்திற்காக கை கால்களை கட்டிவைத்து கம்பால் அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இந்த கொடூர நிகழ்வு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பிறகு நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறை சிறுவர்களை விடுவித்து அவர்களை அடித்தவர்களில் இருவரை கைதுசெய்தனர். ஆனால் இந்த கொடூர நிகழ்வு தொடர்பாக யாரும் புகார் கொடுக்க முன்வராததால் பின்னர் குற்றவாளிகள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர்.

1 கருத்து:

  1. No deposit bonus casino 2021 - Read all about - Gold Casino 카지노사이트 카지노사이트 betway login betway login 176Situs Judi Online Slot Gacor Terbaik No. #10 - CasinoLion

    பதிலளிநீக்கு