பக்கங்கள்

புதன், 1 ஆகஸ்ட், 2018

மருத்துவப் படிப்பில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தள்ளுபடி



புதுடில்லி, ஆக.1 தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக பொது ஜாதி பிரிவை  சேர்ந்த மாணவர்கள் முத்து ராம கிருஷ்ணன், சத்திய நாராயணன் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன் றத்தில் ஒரு மனு தாக்கல் செய் யப்பட்டது. அதில், ‘மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த 1992இல் தீர்ப்பு அளித்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் மட்டும், 69 சதவிகித இட ஒதுக் கீடு கடைப்பிடிக்கப்பட்டு வரு கிறது. இதனால், பொதுப் பிரிவு மாணவர்கள் மருத்துவக் கல்லூரி யில் சேரும் உரிமை பாதிக்கப் பட்டுள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிற் படுத்தப் பட்டோர், தாழ்த்தப் பட்டோர், பழங்குடியினர் ஆகி யோருக்கு 69 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை அரச மைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.

அதோடு, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2018 -

20-19 கல்வியாண்டில் 50 சதவீத இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும், கூடுதல் சீட் ஒதுக்க வேண்டும் என மனு வில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நஜீர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப் பில், கே.எம். விஜயன், ஜி. சிவ பால முருகன் ஆகியோர் ஆஜரா கினர். தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர், சேகர் நாப்தே மற்றும் யோகேஷ் கண்ணா ஆஜராகினார்.

இந்த வழக்கில் இன்று (1.8.2018) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், 69 சதவிகித இட ஓதுக்கீடுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தனர். கூடுதல் சீட் ஒதுக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வழக் குரைஞர் விஜயன் குரலை உயர்த்தி வாதிட்டதாகவும், நீதி மன்றத்தில் அவ்வாறு வாதிட கூடாது என்றும் நீதிபதிகள் கண்டித்தனர்.

1994ஆம் ஆண்டு தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்றி, 69 சதவீத இட ஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்தியது. இதற்கு அப்போதைய குடியரசு தலை வரும் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- விடுதலை நாளேடு, 1.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக