பக்கங்கள்

புதன், 1 ஆகஸ்ட், 2018

பாஜக ஆளும் உ.பி.யில் தாழ்த்தப்பட்ட பாஜக பெண் எம்.எல்.ஏ. வருகைக்குப் பிறகு கோவில் சுத்தப்படுத்தப்பட்டதாம்!



லக்னோ, ஆக.1 உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட பெண் எம்.எல்.ஏ. ஒருவரின் வருகைக்குப் பிறகு கோவில் சுத்தப்படுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட் டத்தில் உள்ள முஸ்கரா  குர்த் கிராமத்தில் த்ரும் ரிஷி கோவில் உள்ளது. மகாபாரத காலத்தில் இருந்து இருப்பதாக கூறப்படும் இந்த் கோவிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளூர்வாசிகளால் பின்பற்றப்படுகிறது. அப்படி மீறி நுழைந்தால் அந்த கோவில் மாசுபட்டு விடும் என்ற நம்பிக்கையாம்.

இந்த தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மனிஷா அனுராக். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் கடந்த 12-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த பொழுது அந்த கோவிலுக்கு வருகை புரிந்துள்ளார்.

ஆனால் அவர் வந்து சென்ற பிறகு அந்த கோவிலானது  கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கோவில் சிலைகள் அனைத்தும் அருகில் உள்ள பிரயாகை நகருக்கு ‘தோஷம்‘ நீக்குவதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த தகவல் வெளி யாகி தற்பொழுது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மனிஷா அனுராக் இது பெண்களை அவமதிக்கும் செயல் என்றும், அரைகுறை அறிவுள்ளவர்களின் நடவடிக் கையென்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

 - விடுதலை நாளேடு, 1.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக