பக்கங்கள்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

பிற்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன தகுதி நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

புதுடில்லி, ஆக. 7- பிற்படுத்தப் பட்டோர் தேசிய ஆணையத் திற்கு அரசியல் சாசன தகுதி அளிக்கும் மசோதா நாடாளு மன்றத்தில் நேற்று நிறைவேறி யது. பிற்படுத்தப்பட்டோருக் கான தேசிய ஆணையத்திற்கு அரசியல் சாசன தகுதி அளிக்

கும் மசோதா மக்களவையில் கடந்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி நிறைவேறியது. மாநிலங் களவையில் எதிர்க்கட்சிகள் சில திருத்தங்கள் கூறியதால் அது மீண்டும் மக்களவை விவா தத்துக்கு கடந்த 2ஆம் தேதி வந்தது. எதிர்க்கட்சிகள் கூறிய திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு, புதிய திருத்தங்கள் சேர்க்கப் பட்டன. அதன்பின் மூன்றில் இரு பங்கு ஆதரவுடன் மக்கள வையில் மசோதா  நிறைவேற் றப்பட்டது.

இந்த மசோதா மீது மாநி லங்களவையில் நேற்று விவா தம் நடந்தது. விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ எம்பி பூபேந்தர் யாதவ், ஏற் கெனவே இந்த மசேதா மாநி லங்களவைக்கு வந்தது. சமூக நீதியை அரசியல் தோற்கடித் ததால், இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்றார். காங்கிரசு எம்.பி சாயா வர்மா பசுகையில், நாடா ளுமன்றங்களிலும், சட்டப்பேர வைகளிலும் ஓபிசி இடஒதுக் கீட்டை கொண்டு வர வேண் டும். உச்ச வரம்பு உடையவர் களை நீக்கப்பட வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையி லான வேலைகளை அரசு ஊக் குவிக்கும்போது, இந்த இட  ஒதுக்கீட்டை அரசு எப்படி அமல்படுத்தும்? என்றார்.

மார்க்சிஸ்ட் எம்.பி டி.கே.ரங்கராஜன் பேசுகையில், மத் திய பல்கலைக்கழகங்களில் சமீபத்தில் நியமனம் செய்யப் பட்ட 100 பேராசிரியர்களில் 7 பேர் மட்டுமே எஸ்.சி/எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினர். அதனால் வெறும் சட்டங்களால் மட்டும் எதுவும் செய்ய முடி யாது. அடித்தட்டு மக்களை முன்னேற்ற நடவடிக்கை தேவை என்றார். காங்கிரசு எம்.பி அரிபிரசாத் பேசுகையில், ஆணையத்தின் தலைவர் உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதி மன்றத்தின் முன்னாள் அல்லது தற்போதைய நீதிபதிகளை நிய மிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் கெட்ட வாய்ப்பாக உச்ச நீதிமன்றத்தில் ஓபிசி அல்லது எஸ்.சி நீதிபதிகள் இல்லாத நிலையே உள்ளது என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி டி.ராஜா பேசுகையில், ஒவ் வொரு மாநிலத்திலும் பிற் படுத்தப்பட்டோருக்கு தனியான ஆணையம் உள்ளது. தேசிய ஆணையத்தால், மாநில அரசு களின் உரிமை பாதிப்பதுபோல் உள்ளது என்றார். இதற்கு பதில் அளித்து பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் கெலாட், பிற்படுத்தப்பட்ட மக்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடவும், அவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கவும் இந்த மசோதா உதவும்.  தேசிய ஆணையத்துக்கும், மாநில அர சுகளின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களுக்கு எந்த தொடர்பும் இருக்காது.

தேசிய ஆணையத்தின் பரிந் துரை மத்திய அரசு சம்பந்தப் பட்டதாக இருக்கும். ஓபிசி ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து கோரிக்கை கடந்த 1980ஆம் ஆண்டுகளில் இருந்து கேட்கப்படுகிறது. இது தொடர்பாக நாடாளுமன் றத்தில் பல முறை விவாதங்கள் நடந்துள்ளன. இதை உறுப்பி னர்கள் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றார். இதை யடுத்து மக்களவையில் செய்த திருத்தங்களுடன் மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஓட் டெடுப்பில் மூன்றில் இரு பங்கு  எம்.பி.க்களின் ஆதரவு டன் இந்த மசோதா நாடாளு மன்றத்தில் நேற்று நிறைவேறி யது.

- விடுதலை நாளேடு, 7.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக