பக்கங்கள்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

மீசை வைத்துக் கொண்டதால் தாக்குதலுக்கு உள்ளான தாழ்த்தப்பட்ட இளைஞர்


சூரத், ஆக. 4 குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் பவ்லா மாவட்டத்தில் இருக்கும் கவிதா கிராமத்தில் புதியதாக ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

ராமன்பாய்ராம்ஜீமக்வானா  என்றதாழ்த்தப்பட்டஇளை ஞரை சார்ட்ஸ் அணிந்ததற்காக வும், மீசை வைத்துக் கொண் டதிற்காகவும் அப்பகுதியில் வசித்து வந்த தர்பார் ராஜ்புத் இனத்தினை சேர்ந்தவர்கள் தாக் கியுள்ளனர்.

மக்வானா பதிவு செய்த புகாரின் பேரில் இதுவரை அய்ந்து நபர்களை கைது செய்து முதல் தகவல் அறிக்கையினை சமர்பித்திருக்கிறது காவல்துறை.

தாழ்த்தப்பட்ட மக்கள் தன்னை தாக்கியதாக, பதிலிற்கு ராஜ்புத் இனத்தவர் ஒருவர் நான்கு பேர் மீது புகார் பதிவு செய்திருக்கிறார். ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அகமதாபாத்தில் மீசை வைத்திருந்த காரணத்திற்காக தாழ்த்தப்பட்ட இளைஞரை தாக்கிய செய்தி பெரும் விவா தத்திற்கு வழி வகை செய்தது.

மீண்டும் இது போன்று ஜாதி யியல் ரீதியான பிரச்சினைகள் நடைபெறாமல் இருப்பதனை உறுதி செய்ய காவல் துறை அக்கிராமத்தினை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

 - விடுதலை நாளேடு, 4.8.19

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக