பக்கங்கள்

ஞாயிறு, 8 நவம்பர், 2015

வகுப்புவாதம் கூடாது, ஆனால் 100-க்கு 50 நமக்கே வேண்டும்


சென்னை மாகாண சார்பாய் இந்திய சட்டசபை பொதுத் தொகுதிக்கு 10 தானங்களுக்கும் தேர்தல் நடந்துவிட்டது. அவற்றின் முடிவு,
சென்னை நகரத்திற்கு
தோழர். சத்தியமூர்த்தி அய்யர் (பார்ப்பனர்)
தஞ்சை - திருச்சிக்கு
தோழர். டாக்டர். டி.எ. ராஜன் அய்யங்கார் (பார்ப்பனர்)
கிருஷ்ணா-கோதாவரி
தோழர் நாகேவரராவ் பந்துலு (பார்ப்பனர்)
சித்தூர்
தோழர் எம். அனந்தசயன அய்யங்கார் (பார்ப்பனர்)
கஞ்சம் விசாகப்பட்டணம்
தோழர் வி.வி.கிரி பந்துலு (பார்ப்பனர்)
குண்டூர் - நெல்லூர்
தோழர். என். ஜீ.ரங்கா (தெரியாது)
மலையாளம்
தோழர். சாமுவேல் ஆரன் (கிறிஸ்தவர்)
கோவை, சேலம், வடஆற்காடு
தோழர் டி.எ. அவினாசிலிங்கம் செட்டியார் (பார்ப்ப னரல்லாதார்)
செங்கல்பட்டு  தென் ஆற்காடு
தோழர் சி.என்.முத்துரங்க முதலியார் (பார்ப்பனரல்லாதார்)
மதுரை - ராமநாதபுரம்
தோழர் பி.எ. குமாரசாமி ராஜா (பார்ப்பனரல்லாதார்)
ஆகவே மேற்படி பத்து தானங்களில் 5- பார்ப்பனர்களும், 1 கிறிதவரும், 1-நமக்கு விபரம் தெரியாதவரும், 3-பார்ப்பனரல்லாதாரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எனவே பார்ப்பனர்களே பார்ப்பனரல்லாதார்களைவிட மெஜாரிட்டி யாய் வெற்றி பெற்றிருக்கிறார்கள். வகுப்புவாதம் கூடாது.
வகுப்பு பிரதிநிதித்துவம் கூடாது என்று பார்ப்பனர்கள் கூப்பாடு போட்டு தங்கள் வகுப்பை உயர்த்திக் கொள்ளும் வகுப்பு வாதமும் தங்கள் வகுப்பு அதிக தானம் பெற்றுக் கொள்ளும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் அடைவதை இப்போதாவது வகுப்புவாதம் கூடாது என்று சொல்லும் பார்ப்பனரல்லாதார் வீரர்கள் (துரோகிகள்) உணர்வார்களாக.
- பகுத்தறிவு - செய்திக்குறிப்பு - 02.12.1934
-விடுதலை,4.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக