பக்கங்கள்

திங்கள், 9 நவம்பர், 2015

அமர்த்தியா சென் பார்வையில்....இடஒதுக்கீடு



அமெரிக்காவில் ஒவ்வொரு நிறுவனத்திலும் கறுப்பர்களுக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு 11 பேர்களுக்கும் ஒரு கறுப்பர் என்ற விகிதாசாரம் பின்பற்றப்படுகிறது.
இன்னுமொரு கூடுதல் தகவல்: தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டில் கூட கறுப்பர்களுக்கென்று இடஒதுக்கீடு செய்யப்படுகிறது.
எந்த காரணத்தினாலோ ஒடுக்கப்பட்ட மக்கள், ஒரு கட்டத்தில் விழிப்புணர்வு பெற்று மேலே ஏறுவதற்கு இது போன்ற வாய்ப்புகள் அவசியம் என்பதை சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். நோபல் அறிஞர் அமர்த்தியா சென் இதுபற்றிக் கூறியிருப்பதை எடுத்துக்காட்டுவது பொருத்தமாகும்.
“Even the issue of merit getting diluted through reservation had to be looked at carefully. While it was very possible that a person benefiting out of reservation might not perform as well as a person selected purely for merit, one had to look beyond just the “bend in the river” to see the “Shape of the river” and see the larger benefit to society over a longer period of time.
While the “neeti” argument would only provide a simplistic answer to this
problem, the “nyaya” argument would look at the problem from a long - term
perspective”
இடஒதுக்கீடு அளித்தால் தகுதி குறைந்துவிடும் என்ற கருத்தை எச்சரிக்கையோடு பார்க்க வேண்டும். தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவரையும், இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவரையும் ஒருக்கால் ஒப்பிட்டுப் பார்த்தால், அதை எப்படிப் பார்க்க வேண்டும்? ஒரு நதியின் வளைவை மட்டும் பார்க்கக் கூடாது. நதியின் ஒட்டு மொத்த போக்கினைக் காண வேண்டும். அதுபோல்தான் நீண்டகால கண்ணோட்டத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கையால் சமூகத்திற்குக் கிடைக்கும் பயன்களை நோக்க வேண்டும்.
நீதி என்ற அடிப்படையில் இதற்கு மிக எளிமையான பதிலை எட்டிவிட முடியாது. நியாயத்தின் அடிப்படையில் நீண்ட கால நோக்கில் இதைப் பார்க்க வேண்டும்.
(பொருளாதார சிந்தனைக்காக நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் - சென்னை அய்.அய்.டி.யில் 22.12.2009)
-விடுதலை ஞா.ம.24.8.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக