பக்கங்கள்

வெள்ளி, 6 நவம்பர், 2015

கொந்தளிக்கும் லாலுபிரசாத்தின் பேட்டி


ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமைக் குரலை எழுப்பினால்
அது ஜங்கள்ராஜ் (காட்டாட்சி) ஆட்சியா?
பார்ப்பனீயம் எப்படியெல்லாம் தலை கொழுத்து ஆடியது!

கொந்தளிக்கும் லாலுபிரசாத்தின் பேட்டி

பாட்னா, நவ.1 தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்களை மாட்டுக்குப்  பதிலாக கழுத்தில் ஏர் பூட்டிக் கொடுமைப்படுத்திய பார்ப்பன உயர் ஜாதிக் கூட்டம், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைக் கான குரலைக் கொடுக்க ஆரம்பித்த நிலையில், அதற்கான எங்கள் ஆட்சிச் சக்கரம் சுழன்ற நிலையில், எங்கள் ஆட் சியைக் காட்டாட்சி (ஜங்கள்ராஜ்) என்று வருணிக்கிறது - மோடி அந்த உயர்ஜாதியினருக் கான கருவி என்றார் லாலுபிரசாத்.
இந்தியா சுதந்திர மடைந்த பிறகு வடக்கே மகாராஷ்டிரம், பஞ்சாப், மேற்குவங்கம் தவிர்த்த அனைத்து மாநிலங்களும் பார்ப்பனீய கட்டுக்குள் சென்றுவிட்டன. மகா ராஷ்டிரத்தை எடுத்துக் கொண்டால் சுதந்திர மடைவதற்கு முன்பிருந்தே டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர், மகாத்மா புலே, மாதா சாவித்திரி பாய் புலே, சாகுமகராஜ் போன்றோரால் உருவாக் கப்பட்ட சமூகநீதி நெருப் பின் வெப்பம் தாளாமல் ஓடி ஒளிந்துகொண்ட பார்ப்பனீயம் சுமார் ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு மைனாரிட்டி பாஜக ஆட்சி மற்றும் மத்தியில் உள்ள மோடியின் ஆதர வோடு மெல்ல தலையை எட்டிப் பார்க்கிறது,
பார்ப்பனீய சக்திகளின் பிடியில் பிகார்  பிகார் மாநிலம், வட இந்தியாவில் உள்ள மாநிலங்களில் இருந்து கொஞ்சம் வேறுபட்டது, ஆண்டுமுழுவதும் வற்றாத கங்கை, கோஷி போன்ற பேராறுகளும் சுமார் 60 சிற்றாறுகளும் பாயும் வளமான பூமி. சுதந்திரம் பெறும் வரை பிகார் மக்கள்   வேலை, கூலி என்று வாழ்க்கை சென்று கொண்டு இருந் தது. சுதந்திரத்திற்குப் பிறகு பிகார் உருவான போதே முழுக்க முழுக்க பார்ப்பனீய சக்திகளின் பிடியில் வந்து விட்டது.
60களின் துவக்கத்தி லேயே மெல்ல மெல்ல அரசமைப்புச் சட்டம் கொடுத்த அனைத்து உரி மைகளும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக் களின் உரிமைகளும் பறிக் கப்பட்டன. மாநிலத்தில் நடக்கும் எந்த ஒரு கொடூ ரமும் வெளியே தெரியாத வாறு பார்ப்பனீய ஊட கங்கள் தங்கள் பணியைச் செய்து கொண்டு இருந்தன.
அவரவர் குலத்தொழிலைச் செய்ய வேண்டும் என்ற அச்சில் ஏறாத சட்டம் அங்கே இருந்தது.    ஆசிரியர்களின் மாடுகளைக் குளிப்பாட்ட வேண்டும் மாணவர்கள்
லாலு பிரசாத் யாதவ் ஒரு நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எங்கள் பெற்றோர் எங்களை பள்ளிக்கு அனுப்புவார்கள். பள்ளி அசம்பிளியிலேயே அந்தந்த ஜாதி மாணவர்கள் பிரிக்கப்படுவார்கள். யாதவ மாணவர்கள் ஆசிரியர்களின் வீட்டு மாடுகளை கவனிக்க அனுப்பப் படுவார்கள். நண்பகல் வகுப்பறைக்கு வந்து தூங்கவேண்டும் பிறகு மாலை வீட்டிற்குச் செல்ல வேண்டும். இப்படித்தான் அந்த அந்த ஜாதி மாணவர்கள் அவரவர் குலத்தொழிலைச் செய்யவேண்டும். இந்தியா எங்கும் இப்படித்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டோம். அப்போ தெல்லாம் ஆசிரியர் மேசையில் இருக்கும் பத்திரி கையைத் தொட்டாலே காது கிழிந்து விடும் அள விற்கு திருகிவிடுவார் என்று தன்னுடைய மாணவர் பருவ அனுபவத்தைக் கூறியுள்ளார் - லாலு பிரசாத்.
நாடோடிகளின் நிலை இதைவிடக் கொடூரம்   என்.டி. டி.வி., என்ற செய்தி தொலைக்காட்சியில் பிகாரில் எலிபிடிக்கும் நாடோடிகளின் வாழ்க்கைப் பற்றி ரவீஷ் குமார் படம்பிடித்திருந்தார். சுதந்திரத்திற்கு முன்பு இந்த மக்கள் வயல்வெளிகளில் பயிர்களைச் சேதப்படுத்தும் எலிகளைப் பிடித்து அதற்கான கூலியை வாங்கிக்கொண்டு வாழ்க்கை நடத்தினர், கூலியாக நெல், கோதுமை, கடுகு, கடலை போன்றவை கிடைக்கும். ஆனால், ஆங்கிலேயர்கள் சென்ற பிறகு இவர்களின் வாழ்க்கையில் கொடூர மாற்றம் ஏற்பட்டது. இவர்கள் வயலில் இறங்குவதால் வயல் தீட்டுப்படுகிறது என்று கூறி உயர்ஜாதியினர் இவர்களை ஊரைவிட்டுத் துரத்தினர். ஏதாவது வேலைகொடுங்கள் என்று கெஞ்ச வேண்டிய நிலையில் மாடுகளுக்குப் பதிலாக இந்த மக்களில் ஆண், பெண் என்று பாராமல் அவர்களின் கழுத்தில் ஏர் பூட்டப்பட்டது. எல்லாவற்றையும் விடக் கொடூரம் அவர்களுக்குக் கூலியாக சாணி கொடுக்கப்பட்டது. ஆமாம் மாடுகளின் வயிற்றில் இருந்து செறிக்காமல் வெளியே வந்த கோதுமைகளை இவர்கள் கழுவி எடுத்துச் செல்லவேண்டும். அதுதான் அவர்களது  உணவு!
சுதன்மான்ஜி என்ற 80 வயது முதியவர் தன்னுடைய அனுபவத்தை பற்றிக் கூறும்போது:  அம்மா கூடை நிறைய சாணியை அள்ளி வருவார்கள் அதைக் கழுவினால் ஒரு கைப்பிடி கோதுமைகூட கிடைக்காது. சில நேரங்களில் அந்தச் சாணிக் கூடையில் மனிதக் கழிவுகளும் கலந்திருக்கும் என்று தெரிவித்தார்.
கூலி கேட்பவர்களைக் கொலை செய்ய கூலிப்படை
தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் போன்றோர்களிடம் இருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டன. விவசாயக் கூலியைக் கேட்கிறார்கள் என்பதற்காக கேட்பவர்களை கொல்லுவதற்கென்றே உயர் ஜாதியினர் அடியாட்களை நியமித்திருந்தனர். இது பின்னாட்களில் ரன்வீர் சேனா என்ற பெயரில் 1980 முதல் 1999ஆம் ஆண்டு வரை சுமார் ஆறாயிரம் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை கொலை செய்திருக்கின்றனர் என்று அரசுப் பதிவேடு கூறுகிறது. ஆனால், இது லட்சத்தையும் தாண்டியிருக்கும் என்று லாலு பிரசாத் போன்ற தலைவர்கள் கூறுகின்றனர்.
மிசா சிறை கொடுத்த மாற்றம்  இந்தக் கொடூர அடக்குமுறைக்கு எதிராக பிகாரில் சில தலைவர்கள் உருவாயினர். ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற தலைவர்களின் வழிகாட்டுதலில் செயல்பட ஆரம்பிக்கும் போது  நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. இது தனித்தனியாக செயல்பட்ட இளைஞர்களை ஒன்றிணைக்கும் விதத்தில் அமைந்துவிட்டது. லாலு பிரசாத் தனது நேர்காணலில் மிசா சிறை அனுபவம் குறித்துக் கூறும் போது,  பிகாரில் பிற்படுத்தப் பட்டோர், தலித்துக்கள் 70 விழுக்காடு; ஆனால் வெறும் 3 விழுக்காடு கொண்ட பார்ப்பனர்கள் சிறையில் உள்ள அனைத்துப் பதவியிலும் நிறைந்திருந்தனர். சிறைவார்டன் முதல் எழுத்தர், கணக்கர், பொருட்கள் மேற்பார்வையாளர் என அனைத்துப் பணியிலும் பார்ப்பனர்கள் தான், இதர அனைத்துப் பணியும் அந்த அந்த ஜாதி சிறைக்கைதிகள் பார்க்கவேண்டும், வரும் ஒருசில பார்ப்பன கைதிகள் சில நாட்களில் வெளியே சென்றுவிடுவார்கள், கைதிகளில் பார்ப்பனர்கள் இருந்தால் அவர்களை செல்லுக்குள் வைக்கமாட்டார்கள். அவர்களை வார்டன் அறையிலேயே தங்கவைத்து பிறகு அனுப்பி விடுவார்கள் இந்தச் சம்பவங்கள் எங்களை மேலும் ஆவேசப்படுத்தி விட்டது. இந்தப் பார்ப்பனீயக் கொடுமையை ஒழிக்காமல் விடமாட்டோம், அரசியல் அதிகாரத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநிறுத்த முடியும் என்ற கொள்கையில் நாங்கள் அனைவரும் ஓரணியில் திரண்டோம்.
சமூக நீதியை மீட்டெடுக்க அரசியல் உரிமை  நாட்டில் அவசர நிலை ஒழிந்தது; மத்தியில் ஆட்சிமாற்றம் எங்களுக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது, நாங்கள் முன்பைவிடத் தீவிரமாக எங்கள் அரசியல் பணியைத் துவக்கினோம்; எங்களை மிகவும் எளிதில் கலவரக் காரர்கள்(தற்போது நக்சலைட்) என்று கூறி அரசுப் படைகள் கொலைசெய்துவிடும். ஆனால், நாங்கள் அதற்கு இடம்கொடுக்கவில்லை. பாபாசாகிப் அம்பேத்கர் வழியில் சமூக நீதியை மீட்டெடுக்க அரசியல் உரிமையை கைப்பற்ற வேண்டும். ஆகையால் மக்களோடு மக்களாக தோள்கொடுத்து நின்றோம், நீண்ட நெடிய போராட்டத்தின் இறுதியில் பாபாசாகிப் அம்பேத் கரின் வாக்கு உண்மையானது, பிகாரில் சமூக நீதி வென்றது.
மோடிக்கு அவரது மாநிலத்தில் அவர் நடத்திய காட்டாட்சிக்கும் (ஜங்கள்ராஜ்) எங்கள் ஆட்சியில் நடந்த நல்லாட்சிக்கும் (மங்கள்ராஜ்) வித்தியாசம் தெரியவில்லை, இது குஜராத் அல்ல பிகார் இங்கு காவிகளில் சூழ்ச்சிகள் பலிக்காது என்று கூறினார்.

அடேயப்பா என்ன கொடுமை?
என்னுடைய (லாலு) ஆட்சி வந்த பிறகு நீண்ட காலமாக பதவிப் பலனை அனுபவித்தவர்கள் என்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினர். மத்தியில் இருந்து சரியான நிதிவராதது போன்றகாரணங்களால் மாநிலத்தில் வளர்ச்சி என்பது மெதுவாகவே இருந்தது. ஆனால் நீண்ட காலமாக செயல்படாமல் இருந்த பிகார் முதல்முதலாக  மற்ற மாநிலங்களோடு போட்டி போடத் துவங்கியது. எனது ஆட்சியில் முழுமையான இட ஒதுக்கீட்டுக் கொள்கை நிறைவேற்றப்பட்டது.
நேற்று வரை மாடுமேய்த்துக் கொண்டு இருந்த மாணவன், முதல் முதலாக தன்னுடைய கல்வியை முழுமையாக கற்க ஆரம்பித்தான், அதில் கூட எவ்வளவு கொடுமைகள் அனுபவிக்க வேண்டி இருந்தது, தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உயர்ஜாதி மாணவனுக்கு சமமாக யாதவ் பையன் உட்கார்ந்தான், தனது வீட்டு மாட்டிற்குப் புல்போட மறுத்தான் என்ற குற்றத்திற்காக மாட்டுத் தொழுவத்தில் வைத்து நகங்களைப் பிடுங்கி மாட்டுக்குப் போடும் ஊசி மூலம் உடல் முழுவதும் குத்தி அவனைச் சாகடித்தனர்.    இந்தக் கொடுமைகளை தட்டிக் கேட்க முழு சுதந்திரம் கிடைத்தது எனது ஆட்சியில் தான், மோடி எனது ஆட்சியை ஜங்கள் ராஜ் என்று கூறுகிறார். ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கு எதிரான கொடுமைகளை -  கண்டு கொதித்தெழுந்து உரிமைக்குரல் எழுப்பினால், அது ஜங்கள்ராஜா? (காட்டாட்சி)யா? - இவர் யாருக்காகப் பேசுகிறார் என்பதுதான் முக்கியம்.
- என்.டி.டி.வி.யில் லாலு பிரசாத் பேட்டி
-விடுதலை,1.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக