பக்கங்கள்

ஞாயிறு, 29 மே, 2016

ஆந்திராவில் இடஒதுக்கீடு போராட்டம்


விஜயவாடா, பிப். 1- ஆந்திர மாநிலத்தில் காபு, பலிகா, தெலகா ஆகிய ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் கணிசமா னோர் உள்ளனர். தான் ஆட்சிக்கு வந்தால், அந்த ஜாதியினருக்கு இட ஒதுக் கீடு அளிப்பதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வாக்கு றுதி அளித்தார். ஆனால், சந்திரபாபு நாயுடு ஆட் சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன பிறகும், இட ஒதுக்கீடே வழங்கப் படவில்லை.
இதனை தொடர்ந்து, நாயுடு பிரிவில் ஒன்றான காபு சமுதாயத்தினரை பிற் படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கக் கோரி ஆந்திர மாநிலம், கிழக்கு கோதா வரி மாவட்டம், துனி பகு தியில் நேற்று காபு கர் ஜனை எனும் பெயரில் பிரம் மாண்ட மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பத்மநாபன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற சாலை மறி யல், ரயில் மறியல் போராட் டத்தின்போது வன்முறை வெடித்தது. அவ்வழியாகச் சென்ற ரத்னாஞ்சல் எக்ஸ் பிரஸ் ரயிலுக்கு தீ வைக் கப்பட்டது. இதில் 8 பெட் டிகள் எரிந்து நாசமாகின. அங்குள்ள காவல் நிலை யமும் தீ வைத்து கொளுத் தப்பட்டது. இதனால் ஆந் திராவில் பதற்றமான சூழ் நிலை நிலவுகிறது.
மேலும், கிழக்கு கோதா வரி மாவட்டம் வழியாகச் செல்லும் கொல்கத்தா _- சென்னை இடையிலான தேசிய நெடுஞ்சாலையை யும் அவர்கள் முடக்கிய தால், அந்த வழியாக போக் குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த கலவரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் உள்துறை உயரதிகாரிகளு டன் விஜயவாடாவில் நேற்று மாலை அவசர ஆலோ சனை நடத்தினார். ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாதாரண மக்கள் இதில் பாதிப்படையக் கூடாது எனவும் முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர் செய் தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு காபு இன மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். மேலும் இந்தப் போராட்டத்தால் காபு மக்களுக்குத் தான் இழப்பு என்றும் கூறினார்.
இந்நிலையில், இட ஒதுக்கீடு கோரிக்கைக்கான தங்களது போராட்டத்தை காபு சமுதாயத்தினர் நேற்று இரவு விலக்கிக் கொண்ட னர். முதல்வர் சந்திரபாபு நாயுடு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறு தியளித்ததன் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள தாகவும், இது அரசுக்கு விடுக்கப்படும் இறுதி எச் சரிக்கை என்றும் காபு சமு தாயத் தலைவர் பத்மனா பன் தெரிவித்தார்.
மேலும் இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள் காபு சமுதா யத்தினரை பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் சேர்ப் பதற்கான ஆணையை ஆந் திர மாநில அரசு வெளியிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இல்லையெனில் சாகும் வரை பட்டினிப் போராட் டம் மேற்கொள்ளப்படும் என்று பத்மனாபன் எச்ச ரிக்கை விடுத்தார்.
-விடுதலை,1.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக