பக்கங்கள்

ஞாயிறு, 15 மே, 2016

இடஒதுக்கீட்டின் மூலம் நிறுவனங்கள் அபார வளர்ச்சி


இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்தவர்களால் நிறுவனங்கள் அபார வளர்ச்சியைத் தொட்டுள்ளன
அமெரிக்க -இந்திய பொருளாதார நிபுணர்களின் ஆய்வின் முடிவு வெளிக்கொணர்ந்த உண்மை
புதுடில்லி, பிப்.7_ இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்தவர் களால் நிறுவனத் தின் உற்பத்தித்திறன் அதிகரித்தது மட்டுமல் லாமல் சத்தமின்றி பல சாதனை உயரங்களைத் தொட்டுள்ளது என சமீபத்தில் வெளிவந்த ஆய்வுகளின் முடிவு வெளிக்கொணர்ந்துள்ளது.  இட ஒதுக்கீட்டால் பணியிடங்களில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படு கிறது, இட ஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்த வர்களால் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் பாதிக் கப்படும். அதன் வளர்ச்சி விகிதம் குறையும் என்று நீண்டகாலமாக இடஒதுக் கீட்டிற்கு எதிரானோர் கூறிவந்தனர்.
இந்தக் கூற்று எந்த அளவிற்கு உண்மை என்பதைக் கண் டறிய அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் டில்லி பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கள் இணைந்து இந்தியா வின் பொதுத்துறை நிறுவனமான ரயில்வேத் துறையில் ஆய்வை மேற் கொண்டனர்.
1980ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரையிலான  முதல் நிலை  மற்றும் இரண் டாம் நிலை அதிகாரிகள் நிலையில் நேரடியாக நடந்த ஆய்வின் முடிவை கடந்த வியாழன் அன்று வெளியிட்டனர். இந்த ஆய்வின் முடிவில் பல் வேறு வியக்கத்தகு  உண் மைகள் வெளிவந்துள்ளன.   இந்த ஆய்வு முடிவின் படி
முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்பதவிகளில் இட ஒதுக்கீட்டின் மூலம் நியமிக்கப்பட்ட அதி காரிகள் மற்றவர்களை விட தங்களின் திறமையை மிகச்சிறப்பான முறையில் வெளியிடுகின்றனர்.
இட ஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந் தோர் அதிகமாகப் பணியா ற்றிய துறையில் பொதுப் பிரிவினரை விட உற் சாகமாகப் பணியாற்றி பல்வேறு துணிச்சலான முடிவுகளை எடுத்து அவற்றை செயலாற்றிய காரணத்தால் ரயில்வே துறை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேரும் அதிகாரிகளில் பெரும் பான்மையோர் முதல் தலைமுறைக் கல்வியா ளர்கள் இவர்கள் தங் களின் திறமையை வெளிக் கொண்டுவர பதவியை பெரிய தூண்டுகோலாக எடுத்துக்கொள்கின்றனர். இவர்களிடம் அதிகாரம் சேரும் போது இட ஒதுக் கீட்டின் மூலம் பணியில் சேர்ந்த, அவருக்கு கீழ் பணிபுரியும் அனைவருக் கும் புதிய உத்வேகத்தை கொடுக்கிறது, இதனால் சுதந்திரமாகப் பணியற்ற நல்ல வாய்ப்பு கிடைக் கிறது.
முக்கியமாக ரயில் வேதுறை என்பது இந்தி யாவின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவன மாகும். உலகின் முன்னணி பொது நிறுவனங்களின் வரிசையில் முதலாவதாக இருக்கும் ரயில்வே நிறுவ னம் இட ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு சமூக மக்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளித்துள்ளது.
இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைத்த இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு நேர்மையுடனும், துணிச்சலுடனும் பணி யாற்றும் சூழ்நிலையை அவர்களாகவே உருவாக் கிக் கொள்கின்றனர்.
இட ஒதுக்கீட்டின் மூலமாக பணியாற்றியவர் களால் பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்ட  காரணத்தால் ரயில்வேதுறை பல்வேறு முன்னேற்றங்களை கண் டுள்ளது. நடுத்தரவர்க்க மக்களால் அதிகம் பயன் பாட்டில் உள்ள ரயில்வே துறையை அந்த மக் களுக்கு ஏற்றவாறு பல் வேறு வசதிகளை உரு வாக்கித்தர முடிந்தது என்றால் அதற்கு இட ஒதுக்கீட்டின் மூலம் பணி யில் சேர்ந்தவர்களால் தான் இது சாத்தியமானது.
ரயில்வேதுறை மாத்திரமல்ல வேறு சில பொதுத்துறை நிறுவனங் களிலும் இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்த அதிகாரிகளால் அந்த நிறுவனம், சில தனியார் நிறுவனங்களை விட முன்னணியில் திகழ்கிறது. இது குறித்த ஆதார பூர்வமான தகவல்களும் இந்த ஆய்வுக்குழுவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதி, திறமை எங் களின் தனிச்சொத்து என்ற பார்ப்பனர்களின் வாதம், இந்த ஆய்வின் மூலம் உடைத்தெறியப் பட்டுள்ளது.
இது நாள் வரை இட ஒதுக்கீடு என்பது திறமை யில்லாதவர்களுக்கும், தகுதியற்றவர்களுக்கும் அரசியல் லாபம் காண் பதற்கான அள்ளித்தரும் செயல் எனவும் இட ஒதுக்கீட்டின் மூலமாக பணியில் சேரும் நபர் களால் நாட்டுக்கு தீமை யும் இவர்களின் மூலமாக நிர்வாகச் சீர்கேடும் பணி யிடங்களில் கடுமையான பேதங்களும் நிலவுகிறது என்று தொடக்கம் முதலே போலியான பிரச்சாரங் கள் மேற்கொள்ளப்பட் டன. இந்தப் பிரச்சாரத் திற்கு ஆதரவாக இட ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்து லாபமடைந்தவர் களின் வாரிசுகளே பின் பாட்டு பாடி வருகின் றனர். இந்த ஆய்வு பொய் யர்களின் முகத்திரையை கிழித்தது மட்டுமல்லாமல் இட ஒதுக்கீட்டை சரிவரப் புரிந்து கொள்ளாத மக் களுக்கு ஒரு தெளிவையும் ஏற்படுத்தி விட்டது.  சமூக நீதிக்களத்தில் திராவிடர் இயக்கம் 1920_-களில் இருந்தே கடுமை யாகப் போராடி வருகிறது. தொடக்க முதலே இட ஒதுக்கீட்டின் நன்மை என்பது நாட்டின் வளர்ச் சிக்கு மிகவும் தேவையான ஒன்று எனக்கூறி வந்தது.
ஆனால், பார்ப்பன ஊட கங்களும், இட ஒதுக்கீட் டிற்கு எதிரான சக்திகளும் தொடர்ந்து பொய்யான பிரச்சாரங்களைச் செய்து வந்தனர். இதன் காரண மாக இன்றளவும் சமூ கத்தில் சமநிலை ஏற்படா மல் இருந்து வருகிறது இதை நாம் கண்கூடாக காண்கிறோம். இட ஒதுக்கீடு இருக் கும் இடத்தில் ஜாதிய பேதங்களும், மோதல் போக்கும் இருக்கும் என்று கூறி முட்டுக்கட்டை போடுபவர்களுக்கு சரி யான சவுக்கடியை இந்த ஆய்வு கொடுத்திருக்கிறது.
இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி சமூகத்தில் இன்றளவும் வாய்ப்புக் களைப் பெற இயலாத நிலையில் உள்ள மக்க ளுக்கு சமூக நீதி வழங்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும். அரசுத் துறை மாத்திரமல்லாமல் தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை வழங்க முன்வரவேண்டும். அதற் கான சட்டங்களை உட னடியாக இயற்றும் சூழல் இந்த ஆய்வு முடிவின் மூலம் உருவாகியுள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அந்த மக்கள் அர்ப்பணிப்பு உணர் வுடன் பணியாற்றுவார்கள்
-விடுதலை,7.2.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக