பக்கங்கள்

சனி, 28 மே, 2016

டாக்டர் டி.எம். நாயர்

டாக்டர் நாயர் அவர்கள் தானே ஆசிரியர் பொறுப்பை மட்டும் ஏற்றுக்கொண்டு, தன் வீட்டில் இருந்து கொண்டு, தொலைப்பேசி மூலம் தலையங்கத்தை தினமும் தந்திட்டார்.
டாக்டர் நாயர், தான் மாணவனாக இருந்த காலத்திலேயே பத்திரிகை அனுபவம் பெற்றவர். பல நாடுகள் சுற்றுப்பயணம் செய்து, ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டவர். நல்ல பேச்சாளர் - எழுத்தாளர். உலகமறிந்த ஆங்கில அறிஞர். அவருடைய கடுமையான பணிகள் பல. அவற்றோடு ஜஸ்டிஸ் ஏட்டின் பொறுப்பை அவரே ஏற்றது மிகமிக பொருத்தம் என்றே கூற வேண்டும்.
காங்கிரஸ் பார்ப்பனர்களின் ஆங்கில ஏடுகள், குறிப்பாக இந்து ஏடு திக்கு முக்காடும் அளவிற்கு ஜஸ்டிஸ் ஏடு ஓகோ என்று விரைவாகவும், வளமாகவும் வளர்ந்தது.
டாக்டர் நாயரின் மறைவுக்குப் பிறகு டி.ஏ.வி.நாதன், டாக்டர் ஏ.இராமசாமி முதலியார் போன்ற ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் ஜஸ்டிஸ் ஏட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பெயரையே ஜஸ்டிஸ் கட்சி - நீதிக்கட்சி என்று மக்கள் மாற்றி அழைக்கும் நிலையை உண்டாக்கினர்.
சுருக்கமாகக் கூற வேண்டுமானால் S.I.L.F. என்று தான் கட்சியின் பெயரை அழைத்திருக்க வேண்டும். ஜஸ்டிஸ் கட்சி என்று தீர்மானம் போட்டு மாற்றப்படவில்லை.
ஒரு பத்திரிகையின் பெயரே கட்சிக்குப் பெயராயிற்று.
நீதிக்கட்சியின் சிற்பி டாக்டர் டி.எம்.நாயர்,
ஏ.எஸ்.வேணு ப: 17
-விடுதலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக