பக்கங்கள்

செவ்வாய், 22 ஜனவரி, 2019

இடஒதுக்கீட்டுக்காக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தீங்கானது

சரத்பவார்




கோலாபூர்,ஜன.14இடஒதுக்கீடு அளிப்பதற்காக அரசமைப் புச் சட்டத்தில் திருத்தம் மேற் கொள்வது, அதன் அடிப்படைக் கொள்கைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மகாராட்டி ரத்திலுள்ள கோலாபூரில் செய் தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பிரதமர் மோடி தலைமை யிலான பாஜக அரசு தேர்தலைக் கருத்தில்கொண்டு, அவசர கதியில் சட்டங்களை இயற்றி வருகிறது. எப்படியிருந்தாலும்,வாக் காளர்களிடம்இந்தச்சட்டங்கள் வரவேற்பைப் பெறப்போவ தில்லை.

பொருளாதாரரீதியில் பின்தங்கியுள்ள பொதுப்பிரிவி னருக்குஇடஒதுக்கீடு அளிப்ப தற்காக அரசமைப்புச் சட்டத் தின் 15- ஆவது மற்றும் 16-ஆவது சட்டப் பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்வது, அர சமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்குத் தீங்கு விளை விக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு வழங்கப் படக்கூடாது என்று உச்சநீதி மன்றம் தெளிவாகத் தெரிவித் துள்ளது.

தேர்தலைக் கருத்தில் கொண்டு, மேலும் பல சட்டங் களை நிறைவேற்று வதற்காக பட்ஜெட் கூட்டத் தொடரை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு சிந்தித்து வருகிறது. அவசரகதியில் முக்கிய முடிவு களை எடுத்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று பாஜக நினைக்கிறது. ஆனால், மக்கள் அனைவரும் விழிப்புடன் உள்ளனர். பாஜகவின் தேர்தல் நாடகம் குறித்து அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். முன் னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்த "தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' திரைப் படம், சிவசேனா கட்சி நிறு வனர் பால் தாக்கரே குறித்த தாக்கரே திரைப்படம் போன்ற அரசியல் சார்ந்த திரைப்படங்கள் வாக்காளர்களிடம் எந்த பாதிப் பையும் ஏற்படுத்தாது என்றார்.

- விடுதலை நாளேடு, 14.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக