பக்கங்கள்

வியாழன், 31 ஜனவரி, 2019

முசுலிம்களுக்கு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் கூறுவதென்ன?

முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்துச் சிறுபான்மையினர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட அளவு ஒதுக்கீட்டை அளிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷன் தன்னுடைய அறிக்கையை 2007இல் பிரதமரிடம் சமர்ப்பித்தது. இவ்வளவு நாள் வரை கிடப்பில் போடப்பட்ட அந்த அறிக்கையை, மக்களவையின் கடைசி நாளான கடந்த 18.12.2009இல் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தாக்கல் செய்துள்ளார். இந்திய முஸ்லிம்கள் இ வ் வ றி க் கையை வரவேற்கும் அதேவேளையில், ஆளும் வர்க்கத்தினர் முஸ்லிம்களின் நியாயமான உணர்வுகளைப் புரிந்துகொண்டு, உடனே இவ்வறிக்கையில் கூறப்பட்டவாறு சிறுபான் மையினருக்கு என்று தனி இடஒதுக்கீட்டை உடனே வழங்க வேண்டும்.


அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

மக்கள்தொகை (பக்கம் 13)

முஸ் லி ம் க ள் - 13 . 4 % (2001ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி)

முஸ்லிம்களின் கல்வி அறிவு (பக்கம் 16,17)

1) முஸ்லிம்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் - 59.1% (அதாவது 40.9% முஸ்லிம்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது)

2) முஸ்லிம்களில் 5ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் - 65.31% பேர்

3) முஸ்லிம்களில் 8ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் -15.14% (அதாவது 100-க்கு 85 பேர் 8ஆம் வகுப்புகூடப் படிக்காதவர்கள்)

4) 10ஆம் வகுப்பு வரை - 10.96% (அதாவது 100-க்கு 90 பேர் 10ஆம் வகுப்புகூடப் படிக்காதவர்கள்)

5) 12ஆம் வகுப்பு வரை - 4.53% (அதாவது 100-க்கு 95 பேர் 12ஆம் வகுப்புகூடப் படிக்காதவர்கள்) 6) பட்டம் (டிகிரி) படித்தவர்கள் - 3.6% பேர்

குடியிருப்புகள்: (பக்கம் 23)

1) முஸ்லிம்களில் 34.63% பேர் குடிதண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வாழ்கின்றனர்.

2) முஸ்லிம்களில் 41.2% பேர் அடிப்படைக் கட்டமைப்பு இல்லாத வீடுகளில் வாழ் கின்றனர்.

3) மீதமுள்ள 23.76% முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கத்தகுந்த வீடுகளில் வாழ்கின்றனர்!

நன்றி: தடம் (ஏப்ரல் 2018)
-  விடுதலை ஞாயிறு மலர், 26.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக