பக்கங்கள்

வியாழன், 31 ஜனவரி, 2019

பிற்படுத்தப்பட்டோர் நிலை இதுதான்!

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலின்படி, மத்திய அமைச்சக அலுவலகங்கள் 35இல் 24லும், மத்திய அரசுத் துறைகள் 37இல் 25இலும், அரசமைப்புச் சட்டத்தை செயல்படுத்த வேண்டிய அமைப்புகளாக உள்ள பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் அலுவலகம், தேர்தல் ஆணை யம் உள்ளிட்டவற்றில் மண்டல் பரிந்துரைகளை கடந்த 24 ஆண்டு களாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.


நாடுமுழுவதும் உள்ள மத்திய அரசுத் துறை களில் உள்ள பணிவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்கள் பெரிதும் பயன் பெறாதநிலையே இருந்து வருகிறது. மத்திய அரசின் தொழிலாளர் நலத் துறையின் சார்பில் கடந்த 8.9.1993 அன்று பிற்படுத்தப்பட்ட வர்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பணியா ளர் மற்றும் பயிற்சித் துறை யின் அலுவலகம் 1.1.2017 அன்று வெளி யிட்ட தகவலின்படி, மத்திய அரசின் 24 அமைச்சக அலுவலகங் களில் குரூப் ஏ பிரிவு அலுவலர் களில் 17 விழுக்காடு பிற்படுத்தப் பட்டவர்கள் உள்ளனர். குரூப் பி பிரிவில் 14 விழுக்காட்டுக்கும் கீழ் பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளனர். குரூப் சி பிரிவில் 11 விழுக்காட்டள விலும், குரூப் டி பிரிவில் 10 விழுக்காட்டளவிலும் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளனர்.

மத்திய பணியாளர் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் மக்களவையில் கூறியதன்படி, மண்டல் குழு பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசுப்பணிகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று 1993ஆம் ஆண்டில் உத்தரவானது. 1.1.2014  அன்றுவரை மத்திய அரசின் 71 அமைச்ச கங்கள் மற்றும் மத்திய அரசின் துறைகளில் 19.24 விழுக்காட்ட ளவில் பிற்படுத்தப்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். பணி யிடங்களில் காலிப்பணியிடங்களை அடையாளம் காண்பது மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை நியமிப்பதற் கான நடை முறைகளில் கால இடைவெளி முக்கிய காரணமாக உள்ளது.

மத்திய அரசின் 24 அமைச்சகங்கள், 25 துறை களில்  குரூப் ஏ பிரிவில் 14 விழுக்காடு, குரூப் பி,சி,டி ஆகிய பிரிவுகளில் முறையே 15, 17, 18 விழுக்காட்டளவில்தான் பிற்படுத்தப்பட்ட வர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இது பிற்படுத்தப்பட்ட வர்களுக்குரிய இடங்களை விட குறைவானதாகவே இருக்கிறது.

அமைச்சக செயலகத்தில் குரூப் ஏ அலுவலர் களுக்கான பிரிவில் 64 பணியிடங்களில் ஒருவர்கூட பிற்படுத்தப்பட்டவர் நியமிக்கப்பட வில்லை. திறந்த போட்டியில் 60 பேரும், தாழ்த் தப்பட்ட வகுப்பினருக்கான பணியிடத்தில் நால்வரும் இடம் பெற்றுள்ளனர். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தில் குரூப் ஏ பிரிவு அலுவலர்கள் 503 பேரில் 25பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர்.

2015ஆம் ஆண்டில், மத்திய அரசின் 12 அமைச்சக அலுவல கங்களிலும் 10 துறைகளுக்கான அலுவலகங்களிலும் குரூப் ஏ பிரிவு அலுவலர் களில்  10.71 விழுக்காட்டளவில் மட்டுமே பிற் படுத்தப்பட் டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குரூப் பி பிரிவில் அலுவலர்களில் 7.18 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்டவர்கள் நியமிக்கப்பட்டனர். 2013ஆம் ஆண்டில் 55 மத்திய அரசு அலு வலகங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் 9.43 விழுக்காட்டளவில் நியமிக்கப்பட்டனர். மத்திய அரசு அலுவலகங்களில் மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கான பணியிடங்கள் குறித்து விவரங்களைக் கோரி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஈ.முரளிதரன் என்பவர் விண்ணப் பித்தார். அவர் கூறுவதாவது:

விவரம் தராத இரயில்வே துறை


இந்த விவரங்கள் மட்டுமே முழுமையான தகவல்களை அளித்துள்ளதாக ஆகிவிடாது. ஏனென்றால், அதிகமான அளவில் பணியாளர்களை நியமித்துவருகின்ற துறைகளான ரயில்வே துறை, பாதுகாப்புத்துறை, உள்துறை மற்றும் நிதித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் 11 அமைச்சகங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பணியாளர்கள்குறித்த தகவலை அளிக்கவே மறுத்துள்ளன. மத்திய அமைச்சகங்களில் அதிக அளவிலான பணியிடங்களைக் கொண்டுள்ள அமைச்சகங்கள்தான் 91.25 விழுக் காட்டளவில் மத்திய அரசின் பணிவாய்ப்புகளைக் கொண்டுள்ளனவாக உள்ளன. 24 அமைச்சகங்களின் ஒட்டு மொத்த பணியாளர்களில் 8.75 விழுக்காட்டளவில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வர்கள் உள்ளனர்.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பின்படி மத்திய அரசின் துறைகளில், ரயில்வே துறையில் 13 லட்சத்து 28ஆயிரத்து 199 பணியிடங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் வகுப்புகள் ரீதியிலான புள்ளிவிவரத்தகவல்கள் கிடையாது. மத்திய அரசின் பணிகள் 31 லட்சம் இருப்பதற்கு மாறாகவே புள்ளிவிவரத் தகவல் 2லட்சத்து 71 ஆயிரத்து 375 பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

2015ஆம் ஆண்டில் மத்திய அரசின் 40 அமைச்சகங்கள் மற்றும் 48 துறைகளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர்கள் எண் ணிக்கை பற்றிய தகவல் அளிக்குமாறு கோரி விண்ணப் பித்த நிலை யில், பல அமைச்சகங்கள், துறைகள் பதில் அளிக்க மறுத்துள்ளன.

அய்.அய்.டி. மேனாள் மாணவர் குமுறல்!


19.12.2003 அன்று மத்திய பணியாளர்துறை வெளியிட்ட விரிவான அறிக்கையின்படி, மத்திய அமைச்சகங்கள, மத்திய அரசுத் துறைகள் அனைத்திலும் உள்ள  பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட வர்கள், பழங்குடியினத்தவர்கள் பணியாளர்கள் குறித்த தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், அது மீறப்பட்டுள்ளது என்று சென்னை அய்.அய்.டி. மேனாள் மாணவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்க வேண்டிய 27 சதவீத இடங்களை அளிக்க முன்வராத - மனம் இல்லாத மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுதான் அவசர அவசரமாக உயர்ஜாதி யினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க இறக்கை கட்டி பறக்கிறது.

-  விடுதலை ஞாயிறு மலர், 26.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக