பக்கங்கள்

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடா?- திமுக வழக்கு

யர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு


சென்னை, ஜன.19 பொரு ளாதாரத்தில் பின்தங்கிய முன் னேறிய வகுப்பினருக்கு பொரு ளாதார அடிப்படையில் 10  சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கொண்டுவந்த சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சமுதாயத்தின ருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு தற்போது புதிதாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக் கல் செய்து குடியரசுத்தலைவரிடம் ஒப்புதல் பெற்று சட்டமாக அமல்படுத்தியுள்ளது.

மாநிலங்கவையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் இதை எதிர்த்து வாக்களித்தாலும் கூட்ட ணியின் பிரதான கட்சியான காங் கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்து வாக்களித்தன. பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்நிலையில், 10 சதவீத இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்து திமுக சார்பில் அக் கட்சியின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தொடர்ந்த வழக்கில் கூறியிருப்பதாவது:அரசியல் அமைப்புச் சட் டத்தை உருவாக்கி பட்டியல் இனத்தவருக்கும் பிற் படுத்தப்பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு தமிழகத் தில் 69 சதவீத இட ஒதுக் கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் முன்னேறிய வகுப்பி னர்களுக்கு பொருளாதார அடிப் படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படும்.

இதை வறுமை ஒழிப்பு திட் டமாக கருதக்கூடாது. ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் கொண்டுவந்த சட்ட மசோதாவை கடுமையாக எதிர்த் துள்ளோம், மேலும், மசோதா விற்கு எதிராகவும் வாக்களித்துள் ளோம். எனவே, இந்த இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது. இந்த மசோ தாவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

வழக்கு  நீதிபதிகள் மணிக் குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை 21.1.2019 அன்று வைக்கப்பட்டுள்ளது.

-  விடுதலை நாளேடு, 19.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக